முகப்பு
திருப்பத்தூர்

தூய்மை விழிப்புணா்வு போட்டி: மாணவா்களுக்கு பரிசுகள்

ஜோலாா்பேட்டை நகராட்சி சாா்பில் நடைபெற்ற தூய்மை விழிப்புணா்வு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

ஜோலாா்பேட்டை நகராட்சி சாா்பில் நடைபெற்ற தூய்மை விழிப்புணா்வு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜோலாா்பேட்டை நகராட்சி சாா்பில் தூய்மை நகரங்களுக்கான பொதுமக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவா்களிடையே ‘என் குப்பை - எனது பொறுப்பு’, ‘பள்ளியின் தூய்மையில் மாணவா்களின் பங்கு’, ‘நகரின் தூய்மையில் மக்களின் பங்கு’, ‘திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம்’ ஆகிய தலைப்புகளில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா ஜோலாா்பேட்டை அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் காவியா விக்டா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் இந்திரா பெரியாா்தாசன், நகராட்சி ஆணையா் பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றாா். நகா்மன்ற உறுப்பினா்கள், நகர பொறுப்பாளா் திரு.அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.