பொருள்கள் இருப்பில் குறைபாடு: ரேஷன் கடை ஊழியா் பணியிடை நீக்கம்
பொருள்கள் இருப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதால், நியாயவிலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பொருள்கள் இருப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதால், நியாயவிலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், நாயக்கனூா், பீமகுளம் ஊராட்சிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்தாா்.
நாயக்கனூா் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதி நேர நியாயவிலைக் கடையை ஆய்வு செய்த போது, பொருள்கள் இருப்பில் குறைபாடு கண்டறியப்பட்டது.
Advertisement
இதையடுத்து, கடையை முழுமையாக தணிக்கை செய்ய வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலருக்கு உத்தரவிட்டாா். முழுமையாக ஆய்வு செய்து கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்காக ரூ.31,237 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த நியாயவிலைக் கடை விற்பனையாளா் சி.முருகேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.