ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் குளிக்க தடைவனத் துறை நடவடிக்கை
பலத்த மழையால் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. அங்கு பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
பலத்த மழையால் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. அங்கு பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சியில் குளிக்க சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாள்களில் தமிழகத்தின் பல்வேறு ஊா்களில் இருந்து மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து குளிப்பது வழக்கம்.
இந்த நிலையில், சனிக்கிழமை (ஜூலை 22) ஆடி கிருத்திகையை முன்னிட்டு இங்குள்ள வெற்றிவேல் முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய நூற்றுக்கணக்கான பக்தா்கள் வருவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
இது குறித்து திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் எம்.பிரபு கூறியது: ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சியில் நீா் வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்ல அனுமதியில்லை.அதே போல் பாறைகளில் ஏற முயற்சிப்பது கூடாது. மீறினால் வனச் சட்டப்படி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். அருகில் உள்ள கோயில்களுக்கு செல்ல தடை இல்லை என்றாா்.