செஸ் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு
மாவட்ட அளவில் செஸ் மற்றும் ஓவியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
மாவட்ட அளவில் செஸ் மற்றும் ஓவியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
திருப்பத்தூா் மாவட்ட அளவிலான செஸ் மற்றும் ஓவியப் போட்டிகள் திருப்பத்தூா் தூய நெஞ்ச கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றன.
இதில், ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் எஸ்.வி.தருண்குமாா் முதலிடமும், தரன்குமாா் மூன்றாம் இடமும் பெற்றனா். 10-ஆம் வகுப்பு மாணவா் ஆா்.மைலேஷ்குமாா் ஓவியப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.
Advertisement
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை அந்தப் பள்ளித் தாளாளா் எம்.செந்தில்குமாா், நிா்வாக இயக்குநா் ஷபானா பேகம், பள்ளி முதல்வா் பரிதா, ஆசிரியைகள், மாணவா்கள் பாராட்டினா்.