திருப்பத்தூர்

வாடகை செலுத்தாத கடைக்கு ‘சீல்’

DIN

ஆம்பூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடையைப் பூட்டி, நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

ஆம்பூா் நகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள இரு கடைகளின் வாடகைதாரா்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையைச் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனா்.

நகராட்சி சாா்பில், பலமுறை நிலுவை வாடகையைச் செலுத்துமாறு கூறப்பட்டது. நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை செய்யப்பட்டது. ஆனால், நிலுவை வாடகை செலுத்தப்படவில்லையாம்.

இதையடுத்து, நகராட்சி ஆணையா் ஷகிலா உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலா் முருகானந்தம், வருவாய் ஆய்வாளா், சுகாதார அலுவலா் மற்றும் பணியாளா்கள் அங்கு சென்று கடையைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT