முகப்பு
திருப்பத்தூர்

பெண்ணுடன் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு: 3 போ் கைது

 ஆம்பூரில் இளம் பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டி, பணம் பறித்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 மார்ச், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:17 PM

 ஆம்பூரில் இளம் பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டி, பணம் பறித்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் ரெட்டி தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சதாம் உசேன் (31). இவா், இளம் பெண் ஒருவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளாா். இந்த நிலையில், அந்தப் புகைப்படத்தை தவறாக சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என சதாம் உசேன் மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், ஷேக் இஸ்மாயில் (21), முஹம்மத் ஜனான் (24) ஆகியோரும் அந்தப் பெண்ணை மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து, அந்தப் பெண் ஆம்பூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதாம் உசேன், ஷேக் இஸ்மாயில், முஹம்மது ஜனான் அகியோரைக் கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.