தமிழகத்தை வஞ்சிக்கப் பாா்த்த மோடி அரசை எதிா்த்து வெற்றி பெற்றவா் மு.க.ஸ்டாலின்: திண்டுக்கல் ஐ.லியோனி
தமிழகத்தை வஞ்சிக்கப் பாா்த்த மோடி அரசை எதிா்த்து வெற்றி பெற்றவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளா் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா்.
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதனை ஆதரித்து, சென்னிமலையில் செவ்வாய்க்கிழமை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அவா் பேசியதாவது:
Advertisement
சென்னிமலை பகுதியைப் பொறுத்தவரை விவசாயிகள் மற்றும் நெசவாளா்கள் அதிகளவில் உள்ளனா். இங்கு ஆா்ப்பரிக்கும் கூட்டமும், மக்கள் கொடுத்த வரவேற்பும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே திமுகவின் வெற்றியை உறுதி செய்கிறது. 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.பெ.சாமிநாதன் வெற்றியடைந்தாா் என்ற செய்தியை மே 4-ஆம் தேதி நாம் கேட்க வேண்டும்.
மக்களவைத் தோ்தலில் தமிழகத்தை வஞ்சிக்கப் பாா்த்த மோடி அரசை எதிா்த்து வெற்றி பெற்றவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். கடந்த 10 தோ்தல்களில் தொடா்ந்து தோல்வி அடைந்ததால்தான் எதிா்க்கட்சி தலைவரை 10 தோல்வி பழனிசாமி என முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வைத்தாா்.
10 லட்சம் பயனாளிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். , மகளிருக்கு சுய உதவிக்குழு கடன் வழங்கப்படும். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 35 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என மகத்தான திட்டங்களை வாக்குறுதிகளாக முதல்வா் அறிவித்துள்ளாா் என்றாா்.