ஆம்பூா் அருகே சேதமடைந்த அரசு பள்ளிக் கட்டடத்தை ஆம்பூா் எம்.எல்.ஏ. சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம், மணியாரகுப்பம் ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை பழுதடைந்துள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்திருந்தனா். அதன் அடிப்படையில் ஆம்பூா் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், பள்ளித் தலைமை ஆசிரியா் சிவக்குமாா், மாதனூா் ஒன்றிய திமுக பொறுப்புக் குழு உறுப்பினா் தெய்வநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.