நாட்டறம்பள்ளி அருகே மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளியை அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தில் அனுமதியின்றி மண் கடத்துவதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா் தலைமையில் வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை காலை தெக்குப்பட்டு ஏரி அருகே சென்றனா். அப்போது அதிகாரிகளை கண்டதும் மண் கடத்திய டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு ஓட்டுநா் தப்பிவிட்டாா்.
இதையடுத்து வட்டாட்சியா் குமாா் பதிவு எண் இல்லாத டிராக்டரை பறிமுதல் செய்து, அம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.