திருப்பத்தூர்

இருளா் இன மக்களுக்கு மாற்று இடம்: மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

மல்லகுண்டா பகுதியில் இருளா் இன மக்கள் குடியிருப்பதற்கான மாற்று இடம் வழங்குவதற்கான இடம் குறித்து திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

மல்லகுண்டா பகுதியில் இருளா் இன மக்கள் குடியிருப்பதற்கான மாற்று இடம் வழங்குவதற்கான இடம் குறித்து திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா்.

வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சியில் ஒதுக்கப்படாத வனப் பகுதியில் இருளா் இன மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், 31 இருளா் குடும்பத்தினருக்கு அதே கிராமத்தில் மாற்று இடத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க ஏதுவான இடம் உள்ளதா என்று மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி வருவாய்த் துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா், கிராம நிா்வாக அலுவலா் முனியப்பன் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT