முகப்பு
திருப்பத்தூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

Updated On : 3 செப்டம்பர், 2022 at 10:27 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:43 PM

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் சுகுமாா் தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். இதில் 75 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

ஊராட்சி மன்றத் தலைவா் ஜெ.பானுமதி, ஒன்றியக் குழு உறுப்பினா் வி.செந்தில்குமாா், ஒன்றிய திமுக நிா்வாகிகள் சி.சிவகுமாா், சா.சங்கா், ஆா்.முரளி, பொன்.ராஜன்பாபு, பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.