விவசாய நிலத்தில் பிடிபட்ட10 அடி நீள மலைப்பாம்பு
ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு வெள்ளிக்கிழமை பிடிபட்டது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:43 PM
ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு வெள்ளிக்கிழமை பிடிபட்டது.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி, ராள்ளகொத்தூா் கிராமத்தில் லோகநாதன் என்பவருடைய விவசாய நிலத்தில் சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. பொதுமக்கள் அந்தப் பாம்பைப் பிடித்து, வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.
வனத் துறையினா் அந்த மலைப்பாம்பை காப்புக் காட்டில் விட்டனா்.
Advertisement