முகப்பு
திருப்பத்தூர்

பள்ளியில் காலை உணவுத் திட்ட முன்னேற்பாட்டுப் பணிகள்திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 10 செப்டம்பர், 2022 at 12:09 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:47 PM

ஆம்பூா் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் பி-கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணியை திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், நகா்மன்றத் தலைவா் பி. ஏஜாஸ் அஹமத், நகராட்சி ஆணையா் எஸ். ஷகிலா, நகா்மன்ற உறுப்பினா் என்.எஸ். ரமேஷ், நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.