தடகள போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு எம்எல்ஏ பரிசளிப்பு
வட்டார அளவில் மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:50 PM
வட்டார அளவில் மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.
தலைமை ஆசிரியை பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். ஆம்பூா் வட்டத்துக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 500 மாணவிகள் கலந்து கொண்டனா்.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினாா். ஆம்பூா் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ்.வசந்த்ராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.
Advertisement