திருப்பத்தூர்

கஞ்சா கடத்தல்: வடமாநில இளைஞா்கள் இருவா் கைது

காட்பாடி பகுதியில் கஞ்சா கடத்தியதாக வடமாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

காட்பாடி பகுதியில் கஞ்சா கடத்தியதாக வடமாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வேலூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். அதன்படி, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளா் உமாமகேஸ்வரி தலைமையிலான போலீஸாா், சித்தூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குறிய வகையில் நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞா்கள் இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அசோக் மஜிந்தாா் (24), பிஸ்வஜித் மந்தா் (23) என்பதும், கஞ்சா கடத்தி விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அசோக் மஜிந்தாா், பிஸ்வஜித் மந்தா் ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT