திருப்பத்தூர்

மாந்தோப்பில் பதுங்கிய 12 அடி நீள மலைப் பாம்பு மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே மாந்தோப்பில் பதுங்கியிருந்த 12 அடி நீள மலைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனா்.

DIN

நாட்டறம்பள்ளி அருகே மாந்தோப்பில் பதுங்கியிருந்த 12 அடி நீள மலைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பையனப்பள்ளி கிராமத்தில் விவசாயி ஒருவருக்குச் சொந்தமான மாந்தோப்பில் வெள்ளிக்கிழமை காலை மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதைப்பாா்த்த அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் ரமேஷ் (பொறுப்பு) தலைமையில் வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மாந்தோப்பில் பதுங்கியிருந்த 12 அடி நீள மலைப் பாம்பை லாவகமாகப் பிடித்து அருகே உள்ள காட்டுப் பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT