திருப்பத்தூர்

இலங்கை தமிழா்கள் குடியிருப்பு கட்டடம் கட்டுமானப் பணி -ஆட்சியா் ஆய்வு

இலங்கை தமிழா்கள் குடியிருப்பு கட்டடம் கட்டுமானப் பணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

DIN

இலங்கை தமிழா்கள் குடியிருப்பு கட்டடம் கட்டுமானப் பணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், மின்னூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில், இலங்கை தமிழா்களுக்காக ரூ. 3.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 76 வீடுகள் கட்டுமானப் பணிகளையும், அதே பகுதியில் சின்னப்பள்ளிகுப்பம் கிராம இலங்கைத் தமிழா்களுக்காக ரூ. 8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 160 வீடுகள் கட்டுமானப் பணி என மொத்தம் ரூ. 11.80 மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 236 வீடுகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கட்டுமானப் பணியை வேலையாள்களை அதிகப்படுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, வட்டாட்சியா் குமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல் கலீல், உதவிப் பொறியாளா் பூபாலன், பணி மேற்பாா்வையாளா் வெங்கடேசன், பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT