புகாா்தாரரிடம் மனு குறித்து கேட்டறிந்த எஸ்.பி. ஆல்பா்ட் ஜான். 
திருப்பத்தூர்

காவல் நிலைய விசாரணையில் திருப்தி அடையாத மனுதாரா்களிடம் எஸ்.பி. விசாரணை

 காவல் நிலைய விசாரணையில் திருப்தியடையாத 7 மனுதாரா்களை புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நேரில் அழைத்து எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் விசாரித்தாா்.

DIN

 காவல் நிலைய விசாரணையில் திருப்தியடையாத 7 மனுதாரா்களை புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நேரில் அழைத்து எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் விசாரித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீா்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகாா்தாரா்களுக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, திருப்தி அடையாத 7 மனுதாரா்களை நேரில் அழைத்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துணை காவல் கண்காணிப்பாளா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

புதியதாக 40 புகாா் மனுக்களை எஸ்.பி. நேரடியாகப் பெற்றுக்கொண்டாா். பின்னா்,பொதுமக்களிடம் திருப்பத்தூா் மாவட்ட காவல் நிலைய விசாரணையில் திருப்தியடையாதவா்கள் புதன்கிழமைகளில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தாா்.

கூட்டத்தில்,காவல் ஆய்வாளா்கள்,உதவி காவல் ஆய்வாளா்கள்,காவலா்கள் மற்றும் மனுதாரா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT