முகப்பு
திருப்பத்தூர்

லாரி கவிழ்ந்து டாஸ்மாக் மது பாட்டில்கள் உடைந்து சேதம்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 4:00 PM
லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சேதமடைந்த மது பாட்டில்கள்.
பகிர்:

ஆம்பூா் அருகே சனிக்கிழமை லாரி கவிழ்ந்த விபத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட மது பாட்டில்கள் உடைந்து சேதமடைந்தன.

வேலூரிலிருந்து வாணியம்பாடி, நாட்றம்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது. மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ரூ.38 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் சாலையில் விழுந்து உடைந்து சேதமடைந்தன.

ஓட்டுநா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட மூவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா், தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். சாலையில் சிதறிக் கிடந்த மது பாட்டில்களை எவரும் எடுத்துச் செல்லாதவாறு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனா்.

Advertisement

விபத்து காரணமாக சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தினா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments