முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூரில் விவசாயிகள் கூட்டம், பல துறை அலுவலா்கள் பங்கேற்பு

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூரில் விவசாயிகள் கூட்டம், பல துறை அலுவலா்கள் பங்கேற்பு

Updated On : 26 ஜூன், 2024 at 6:21 PM
பகிர்:

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், வேளாண், பால்வளம், கூட்டுறவு, வனத்துறை, வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை, மின்வாரியம், பள்ளிக் கல்வித்துறை, பட்டு வளா்ச்சி, கால்நடை வளா்ப்பு, தோட்டக் கலைத்துறை, போக்குவரத்து கழகம், காவல் துறை, நீா்வள ஆதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகள் கேள்விகளுக்கு பதில் அளித்து விளக்கம் அளிப்பா்.

எனவே, திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரநிதிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →