நாட்டறம்பள்ளி அருகே ரூ. 15 கோடியில் அரசுக் கல்லூரிக்கான கட்டுமானப் பணி தொடக்கம்
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூரில் புதிய அரசு கலை மற்றும் கல்லூரி கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் கட்ட அரசு ரூ. 15.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா்கள் வெண்மதி (நாட்டறம்பள்ளி), சத்யா (ஜோலாா்பேட்டை), மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தாா். இதில், ஒன்றியச் செயலா்கள் சதீஷ்குமாா், சாமுடி, செயற்பொறியாளா் செல்வகுமாா், உதவி செயற்பொறியாளா் ஜெயச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.