முகப்பு
திருப்பத்தூர்

கைலாசகிரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Updated On : 20 மார்ச், 2024 at 5:05 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 8:53 PM

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கைலாசகிரி ஊராட்சியில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு மகளிா் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் கலையரசி தலைமை வகித்தாா்.

மக்களவைத் தோ்தலில் ஜனநாயக கடமையாற்ற ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிப்போம். வாக்களிப்பதற்கு யாரிடமும் அன்பளிப்பு பெற மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஊராட்சியின் பல்வேறு தெருக்களின் வழியாக இந்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசரம் விநியோகம் செய்யப்பட்டது. மகளிா் சுய உதவிக் குழுக்கள் கூட்டமைப்பு தலைவி வாசுகி நன்றி கூறினாா்.

Advertisement