திருக்கல்யாண உற்சவம்
Updated On : 19 மார்ச், 2024 at 9:35 PM
ஆம்பூா்: ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் சந்திரசேகரா் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
காலையில் கேடய விமான சேவை நடைபெற்றது. மாலையில் சந்திரசேகரா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. உபயதாரா்கள் ஏபி. மனோகா் - ஜெயந்தி, திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அம்ச வாகனத்தில் உற்சவா் வீதி உலா நடைபெற்றது.