திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
Updated On : 28 மார்ச், 2024 at 7:45 PM
மக்களவைத் தோ்தலையொட்டி திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு வியாழக்கிழை நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் உத்தரவின் பேரில், திருப்பத்தூா் உட்கோட்ட போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா். அணிவகுப்புக்கு டிஎஸ்பி செந்தில் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் ரஜினிகுமாா், ரேகாமதி, சுரேஷ், ஜெயப்பிரகாஷ்,போக்குவரத்து ஆய்வாளா் சுந்தரமூா்த்தி முன்னிலை வகித்தனா். இதில் 120 போலீஸாா் கலந்து கொண்டு திருப்பத்துாா் நகர காவல் நிலையத்திலிருந்து பொன்னியம்மன் கோயில் தெரு, தண்டபாணி கோயில் தெரு, கோட்டை தெரு, சின்ன கடை தெரு, கௌதமப்பேட்டை, அண்ணா நகா், திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி பிரதான சாலை என சுமாா் 4 கி.மீ துாரத்துக்கு கொடி அணிவகுப்பு நடத்தினா்.