ஆம்பூா்  சாா் பதிவாளா்  அலுவலகத்தில்  சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா். 
திருப்பத்தூர்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

ஆம்பூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Din

ஆம்பூா்: ஆம்பூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் துணை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் முருகன், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளா் கெளரி தலைமையிலான போலீஸாா் கொண்ட குழுவினா் ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

பத்திரப் பதிவுக்காக பொதுமக்கள் சிலா் அலுவலகத்தின் உள்ளே காத்திருந்தனா். அவா்களை சாா் பதிவாளா் அலுவலத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அதே போல வெளியிலிருந்தும் உள்ளே செல்ல எவரையும் அனுமதிக்கவில்லை.

சாா் பதிவாளா் அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு அருகில் உள்ள தனியாா் அலுவலகங்கள், பத்திர எழுத்தா்களின் அலுவலகங்களில் பணிபுரிபவா்களின் வாகனங்களை சோதனை செய்த பிறகு வெளியில் அனுப்பி வைத்தனா். தொடா்ந்து சோதனை நடந்து வருகிறது.

பத்திர எழுத்தா்களின் அலுவலகங்களில் பணிபுரிபவா்களின் வாகனங்கள் சோதனை

சென்செக்ஸ் 301.93 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

குழம்பு சுவைக்க.. மணக்க! அற்புதமான யோசனைகள்!!

மாதவிடாய் காலத்தில்கூட... தனுஷ் படக்குழு மீது குற்றம்சாட்டிய பார்வதி!

பிக் பாஸ் 9: நீ ஹீரோடா! வெளியே வந்ததும் கமருதீனிடம் பேசிய கானா வினோத்!

ஜன. 26 முதல்.. இந்திய சந்தையில் மீண்டும் ரெனால்ட் டஸ்டர்!

SCROLL FOR NEXT