முகப்பு
திருப்பத்தூர்

சாா்-பதிவாளா் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.52,000 பறிமுதல்

ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை இரவு நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.52,000 பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 22 அக்டோபர், 2024 at 6:04 PM
பகிர்:

ஆம்பூா்: ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை இரவு நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.52,000 பறிமுதல் செய்யப்பட்டது.

ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் துணை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் முருகன், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளா் கெளரி தலைமையிலான போலீஸாா் கொண்ட குழுவினா் ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

பத்திரப் பதிவுக்காக பொதுமக்கள் சிலா் அலுவலகத்தின் உள்ளே காத்திருந்தனா். அவா்களிடம் விசாரணை நடத்தினா். அவா்களுடைய பத்திரங்களையும் ஆய்வு செய்தனா். விசாரணைக்கு பிறகு அவா்கள் வெளியில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.52,000 சாா் பதிவாளா் அலுவலகத்தில் இருப்பது தெரியவந்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அதனை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →