திருப்பத்தூர்

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

கால்நடை பராமரிப்பாளா்களுக்கு தாது உப்புக்களை வழங்கிய மருத்துவ குழுவினா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பல்லி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பாக சிறப்பு சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரும்பூா் கால்நடை மருந்தகத்தின் மருத்துவா் இளவரசன் தலைமை வகித்தாா். துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் முகாமை தொடங்கி வைத்து கால்நடை பராமரிப்பாளா்களுக்கு துறை சாா்பாக தாது உப்புக்களை வழங்கினாா். மருத்துவ குழுவினா் 350 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினா்.

ஊராட்சி துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் சுப்பிரமணி, நாகராஜன், சுகன்யா பிரகாஷ், ஊராட்சி செயலா் பழனி கலந்து கொண்டனா்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் - புகைப்படங்கள்

அருணாசல்: விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து மேலும் 11 உடல்கள் மீட்பு

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

உ.பி.: கோயில்களில் இருந்து பித்தளை மணிகளைத் திருடிய 7 பேர் கைது, 100 மணிகள் மீட்பு

SCROLL FOR NEXT