திருப்பத்தூர்

எஸ்.பி. அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்தாா். ஏடிஎஸ்பி முத்துக்குமரன், டிஎஸ்பி-க்கள் சௌமியா(திருப்பத்தூா்), மகாலட்சுமி (வாணியம்பாடி), குமாா் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது எஸ்.பி. பேசியது: காவல் நிலையங்களுக்கு வரும் புகாா்தாரா்களிடம் இருந்து புகாா் மனுக்களை பெற்று விரைவாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் வழக்குகளை உடனடியாக விசாரணை செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காலதாமதம் இன்றி விரைவாக முடிக்க வேண்டும். 2024-ஆம் ஆண்டுக்கு முன்பு உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா். பின்னா், காவல் நிலையங்களில் கோப்புகளை பராமரிக்கும் முறைகள் குறித்து விளக்கமளித்தாா்.

இதில், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT