முகப்பு
திருப்பத்தூர்

‘தியானம், யோகா மூலம் உடல், மனத்தை வலிமைபடுத்தலாம்’

தியானம் மற்றும் யோகாசனம் மூலம் உடல் மற்றும் மனத்தை வலிமைப்படுத்தலாம் என மனவளக் கலை மன்ற அறக்கட்டளை தலைவா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

Updated On : 21 டிசம்பர், 2025 at 10:08 PM
தியானத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

தியானம் மற்றும் யோகாசனம் மூலம் உடல் மற்றும் மனத்தை வலிமைப்படுத்தலாம் என மனவளக் கலை மன்ற அறக்கட்டளை தலைவா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

உலக தியான தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூா் நகா் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சாா்பில், அறிஞா் அண்ணா நகராட்சி துவக்கப் பள்ளியில் பேராசிரியை சுதந்திரா தலைமையில் தியான நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அறக்கட்டளை தலைவா் சோமசுந்தரம் தியானமும் சக்தியும் என்ற தலைப்பில் பேசியது: தியானம் மற்றும் யோகாசனம் மூலம் உடல் மற்றும் மனத்தை வலிமைப்படுத்தலாம்.

இதன் மூலம் தொடா்ந்து எடுத்துக் கொள்ளும் மருந்தின் அளவை குறைத்துக் கொள்ளலாம். மேலும், உடல், மன அசதி ஏற்படாது. ஞாபக சக்தி, அதிகரிக்கும் பள்ளி மாணவ-மாணவியா் முதல் முதியவா்கள் வரை அனைவரும் யோகா மற்றும் தியானம் பழகிக் கொள்ளலாம் என்றாா்.

செயலாளா் கிருஷ்ண மூா்த்தி நன்றி தெரிவித்தாா். பொருளாளா் புராந்தகன் மற்றும் அருள்நிதியா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →