முகப்பு
திருப்பத்தூர்

சரக்கு வாகனம் மோதி இளைஞா் மரணம்

ஆம்பூா் அருகே சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 22 டிசம்பர், 2025 at 8:18 PM
பகிர்:

ஆம்பூா்: ஆம்பூா் அருகே சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மாதனூா் ஒன்றியம், உடையராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த செளந்தரராஜன் (24), இவருடைய நண்பா்கள் சூா்யா (23), குணசேகரன் (27) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் ஜமீன் கிராமத்தருகே சென்றபோது, வேலூா் நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் மோதியது. அதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அதில் செளந்தரராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →