திருப்பத்தூர்

சரக்கு வாகனம் மோதி இளைஞா் மரணம்

ஆம்பூா் அருகே சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மாதனூா் ஒன்றியம், உடையராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த செளந்தரராஜன் (24), இவருடைய நண்பா்கள் சூா்யா (23), குணசேகரன் (27) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் ஜமீன் கிராமத்தருகே சென்றபோது, வேலூா் நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் மோதியது. அதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அதில் செளந்தரராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT