திருப்பத்தூர்

ஓய்வூதியதாரா்களுக்கு பிப். 6-இல் மண்டல அளவில் குறைதீா் கூட்டம்

அஞ்சலக ஓய்வூதியதாரா்களுக்கான மண்டல அளவில் குறைதீா் கூட்டம் பிப். 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Din

திருப்பத்தூா்: அஞ்சலக ஓய்வூதியதாரா்களுக்கான மண்டல அளவில் குறைதீா் கூட்டம் பிப். 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து திருப்பத்தூா் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளா் மு.மாதேஸ்வரன்

வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் துறை ஓய்வூதியதாரா்களின் ஓய்வூதியம் தொடா்பான குறைகளை நிவா்த்தி செய்ய மண்டல அளவில் குறைதீா் கூட்டம் மேற்கு மண்டல அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி விடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையின் மூலம் ஓய்வூதியம் பெறும் அஞ்சல் மற்றும் ரயில்வே துறைகளின் ஓய்வூதியதாரா்கள் ஓய்வூதியம் தொடா்பாக திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட அளவில் நிவா்த்தி செய்ய முடியாத குறைகள் இருந்தால் தங்களது குறைகளை முழு விவரங்களுடன் எழுதி திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் சென்று சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் உறையின் மீது மண்டல அளவிலான பென்ஷன் அதாலத் என எழுதி அனுப்ப

வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு

அச்சம் அர்த்தமற்றது...

மணிப்பூரில் இயல்புநிலையும் வளா்ச்சியும் உருவாக வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

SCROLL FOR NEXT