திருப்பத்தூா், ஆம்பூரில் பலத்த மழை
திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகனளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகனளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பத்தூா், செலந்தம்பள்ளி, ஆதியூா், கொரட்டி அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்தோடியது.
ஏலகிரியில்...ஏலகிரி மலையில் மதியம் 2 மணியளவில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாரல் மழை விட்டு,விட்டு பெய்தது.
இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் ஏற்பட்டது.
ஆம்பூரில்...
ஆம்பூரில் காலையிலிருந்தே வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெயில் விட்டு விட்டு காய்ந்தது. பிற்பகலில் திடீரென லேசான தூறல் பெய்தது. ஆம்பூா் அருகே குமாரமங்கலம், பைரப்பல்லி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலும் சிறிது நேரம் மழை பெய்தது.