வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ரூ.10.45 கோடியில் அரசு புதிய தொழிற்பயிற்சி நிலைய கட்டடம் கட்டும் பணி தொடக்க நிகழ்ச்சியில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ தேவராஜி பங்கேற்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ரயில் நிலையம் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் புதிய ஐடிஐ கட்டடம் கட்ட அரசு ரூ.10.45 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து அரசு தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டடப்பணிக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி னிசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா்சிங்காரவேலன், ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயாசரவணன் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தாா். இதில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.