திருட்டு நடந்த இடத்தில் விசாரணை நடத்திய போலீஸாா்.  
திருப்பத்தூர்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

ஆம்பூா் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருடியது சம்பந்தமாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருடியது சம்பந்தமாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

மாதனூா் ஒன்றியம் மின்னூா் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்த பிறகு கடை மூடப்பட்டது. நள்ளிரவில் மா்ம நபா்கள் மதுபான கடை கதவின் பூட்டை உடைத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை சேதப்படுத்தி, கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.15000 ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா். தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும் வழக்கு பதிவு செய்தனா்.

தோட்டா தரணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

பிகார் காங்கிரஸ் தலைவர் ராஜிநாமா.. தேர்தல் முடிந்த அன்றே திடீர் முடிவு!

நத்தம் அருகே சாலை தடுப்பில் மோதி பால் வேன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே பலி!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தர்மேந்திரா!

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT