திருப்பத்தூர்

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கந்திலி அருகே நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் சிவப்பிரகாசம்(25). இவா் சனிக்கிழமை ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது அங்குள்ள பாறையில் ஏறியபோது தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சிவப்பிரகாசத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிவப்பிரகாசம் உயிரிழந்தாா். இது குறித்து குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT