திருப்பத்தூர்

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

ஜோலாா்பேட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அருகே மேட்டுச்சக்கரகுப்பத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தா (71). இவா் புதன்கிழமை முதியோா் உதவித்தொகை பெறுவதற்காக சந்தைக்கோடியூா் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது ஜோலாா்பேட்டை நோக்கிச் சென்ற மோட்டாா் சைக்கிள் சாந்தா மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த ஜோலாா்பேட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தை ஏற்படுத்திய முன்னாள் ராணுவ வீரா் ரமேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிராக கும்பகோணம் ஆணையரிடம் மனு

ரூ.38.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

பெங்களூரில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வேனை மறித்து ரூ. 7.11 கோடி கொள்ளை!

SCROLL FOR NEXT