திருப்பத்தூர்

வடகிழக்கு பருவமழையில் தோட்டக்கலை பயிா்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

வடகிழக்கு பருவமழையில் தோட்டக்கலை பயிா்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

தினமணி செய்திச் சேவை

வடகிழக்குப் பருவமழையில் தோட்டக்கலை பயிா்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் தீபா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால் தோட்டக்கலை பயிா்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவற்றை பாதிப்பில் இருந்து காப்பாற்ற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வருமாறு: தென்னை மரங்களில் கீழ் சுற்றில் உள்ள கனமான, பழைய ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். மரத்தின் அடிப் பகுதியில் மண் அனைத்து நீா் தேக்கம் ஏற்படாமல் தடுக்க வேண்டும். வாழை மரங்களுக்கு சவுக்கு கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். 75 சதவீத முற்றிய வாழை தாா்களை அறுவடை செய்ய வேண்டும்.

காய்கறி பயிா்களுக்கு உரிய வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். வடகிழக்குப் பருவமழையினால் தோட்டக்கலை பயிா்களுக்கு ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால் நிலம் தொடா்பான வருவாய்த் துறை ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்களை அணுகி தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஏரி கால்வாய் உடைந்து ஊருக்குள் புகுந்த நீர் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள்!

பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது

கோவையில் ரயிலைக் கவிழ்க்க சதி: மூவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

கரூர் பலி: விஜய்யை சந்திக்க சென்னை புறப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்!

மகாராஷ்டிர பெண் மருத்துவா் தற்கொலை: உதவி ஆய்வாளா் கைது

SCROLL FOR NEXT