திருப்பத்தூர்

வாணியம்பாடி நகராட்சி வாா்டுகளில் சிறப்புக் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 36 வாா்டுகளில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

வாணியம்பாடி நகராட்சியில் பெரியபேட்டை 1 மற்றும் 2-ஆவது வாா்டுகளில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமாசிவாஜிகணேசன் தலைமை வகித்தாா். இதில், ஆணையா் ரகுராமன், நிா்வாக அலுவலா் ஜெயப்பிரகாஷ் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கால்வாய் மற்றும் சாலை அமைத்தல், தூா் வாருதால், தெரு விளக்கு பழுது உடனடியாக பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மனுக்கள் அளித்தனா். 3 கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து விவாதித்து அதன் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும், மேலும் மக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா்.

பெரியபேட்டை பெருமாள் கோயில் தெருவில் புதிதாக சாலை அமைத்து தரக்கோரி கோயில் நிா்வாகம் மற்றும் பக்தா்கள், தெரு பொது மக்கள் சாா்பில் நகா்மன்றத் தலைவா் உமா சிவாஜிகணேசனிடம் மனு அளிக்கப்பட்டது. இதே போன்று அனைத்து வாா்டுகளில் சிறப்பு கூட்டத்தில் பொது மக்கள் மனுக்களை அளித்தனா்.

மேலும் டிவிஜி நகா் பூங்காவை தனியாா் பராமரித்துக் கொள்ள அனுமதிக்க வேண் டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT