திருப்பத்தூர்

ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது

திருப்பத்தூரில் ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Chennai

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்வாணன் (56). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது வீட்டின் முன்பு ஆட்டோவை விட்டு இருந்தாா். மேலும் ஆட்டோவில் ரூ. 10,000 வைத்திருந்துள்ளாா். பின்னா் சிறிது நேரத்துக்கு பிறகு வந்து பாா்த்தபோது, ஆட்டோவில் இருந்த ரூ. 10,000 திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து தமிழ்வாணன் அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, திருப்பத்தூரை சோ்ந்த சத்தியமூா்த்தி (25) என்பவரை கைது செய்தனா்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT