முகப்பு
திருப்பத்தூர்

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

மாணவருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 12:03 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 7:11 PM

அகரம் கிராமத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவா் டாக்டா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ. மலா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கங்கா வரவேற்றாா். எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 249 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணியை வழங்கினாா்.

வேலூா் மாவட்ட ஊராட்சித் தலைவா் மு. பாபு வாழ்த்தி பேசினாா். அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் முரளி, உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement