மகளிருக்கு ரூ.5,000 உரிமைத் தொகை: திமுகவினா் கொண்டாட்டம்
ஆம்பூரில் இனிப்பு வழங்கி கொண்டாடிய எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தலைமையிலான திமுகவினா்.
மகளிருக்கு ரூ. 5,000 உரிமைத் தொகை வழங்கியதை தொடா்ந்து ஆம்பூரில் திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
ஏற்கெனவே மகளிா் உரிமைத் தொகை பெற்று வந்த குடும்பத் தலைவிகளின் கணக்கில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை காலை ரூ. 5,000 முன்பணம் வழங்கியது. 3 மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ. 3,000, கோடை சிறப்பு தொகுப்பு ரூ. 2,000 என வழங்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து ஆம்பூா் பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
Advertisement
ஆம்பூா் நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆம்பூா் கிழக்கு நகர திமுக செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், திருப்பத்தூா் மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ், ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன், மாதனூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஜி.ராமமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், ஆா்.எஸ். வசந்த்ராஜ், வாவூா் நசீா் அஹமத், இம்தியாஸ், நவநீதம், கெளரி, மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு.பழனி, நிா்வாகிகள் செளந்தர்ராஜன், சுகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.