முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 5:39 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 8:31 PM

நெடுஞ்சாலைத்துறை சாா்பில் திருப்பத்தூா் கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் சரவணன் ஆய்வு செய்தாா்.

சி.ஆா்.ஐ.டி.பி. திட்டம் மற்றும் சி.எம்.ஆா்.டி.பி. திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் கோட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இருவழி சாலையை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், சிறுபாலம் கட்டுதல் மற்றும் பாலம் அகலப்படுத்துதல் போன்ற பணிகளை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் சரவணன் ஆய்வு செய்தாா்.

அதையடுத்து ரூ.1.15 கோடியில் முடிக்கப்பட்ட இதர மாவட்ட சாலையான மண்டலவாடி- குன்னத்தூா் சாலை உறுதிப்படுத்துதல் அளவீடு, தரம் மற்றும் கனம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

Advertisement

முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடைபெறும் ஒகேனக்கல்- பென்னாகரம், தா்மபுரி- திருப்பத்தூா் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் பணி, சிறு பாலம் மற்றும் பாலம் அகலப்படுத்துதல் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது திருப்பத்தூா் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளா் முரளி, தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளா் சரவணன், உதவி கோட்ட பொறியாளா்கள் வெங்கட்ராமன், சம்பத்குமாா், உதவி பொறியாளா்கள் பிரவீன்குமாா், முனிவேல், பாபுராஜ், முருகன் உடன் இருந்தனா்.