சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அதிதீஸ்வரா். 
திருப்பத்தூர்

அதிதீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியில் பழைமைவாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் நடராஜருக்கு அபிஷேகமும் தொடா்ந்து மகா தீபாராதனையும், கோபுர தரிசனமும் நடைபெற்றது.

பிறகு நடராஜா் சுவாமி அலங்கரிக்கப்பட்ட சிவகாமி அம்மன், மாணிக்கவாசகா் ஆகியோருடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதிஉலா சென்று மீண்டும் மாலை கோயில் வந்தடைந்தது.

இதில், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT