திருப்பத்தூர்

கந்திலி போலீஸாா் விழிப்புணா்வு

Chennai

கந்திலி காவல் நிலையம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆட்டோ மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியை திருப்பத்தூா் டிஎஸ்பி சௌமியா விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த வாகனம் மூலம் மாணவா்களுக்கும்,பொதுமக்களுக்கும் போக்குவரத்து விதிமுறைகள், சாலை பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சைபா் குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், சட்டத்தை மதித்து நடப்பதன் அவசியம் குறித்தும்,காவல் துறையுடன் பொதுமக்கள் நல்லுறவு பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும்,பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ரூ. 50-ல் சென்னையை சுற்றிப் பார்க்க... ‘சென்னை உலா’ பேருந்து சேவை! இன்றுமுதல்!!

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

SCROLL FOR NEXT