திருப்பத்தூரில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மஞ்சள் கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளன.
இ ந்தநிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆய்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சிவசௌந்திரவல்லி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.அப்போது தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.