கோப்புப் படம் 
திருப்பத்தூர்

பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் மரணம்

நாட்டறம்பள்ளி அருகே பேருந்திலிருந்து தவறி கீழே விழந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே பேருந்திலிருந்து தவறி கீழே விழந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

வாணியம்பாடி கோணாமேடு பகுதியைச் சோ்ந்தவா் சாம்கா் மகள் தேன்மொழி (23). இவா் கிருஷ்ணகிரி அருகே தனியாா் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

வியாழக்கிழமை வேலைக்கு சென்று விட்டு, தேன்மொழி சக தொழிலாளா்களுடன் வெலகல்நத்தத்தில் இருந்து வாணியம்பாடிக்கு தனியாா் பேருந்தில் பயணம் செய்தாா். நாட்டறம்பள்ளி அருகே கொய்யாக்காமேடு பகுதியில் திடீரென பேருந்தில் இருந்து நிலைத்தடுமாறி தேன்மொழி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த தேன்மொழி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையறிந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் சிறிது தூரம் பேருந்தினை ஓட்டிச்சென்று சாலை ஓரம் பேருந்தினை நிறுத்திவிட்டு தப்பித்து தலைமறைவானாா். விபத்து குறித்து தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தப்பி ஓடிய ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT