முகப்பு
திருப்பத்தூர்

2-ஆவது நாளாக விவசாய நிலத்தில் புகுந்த யானைக் கூட்டம்

Updated On : 18 மே 2026, 1:33 am IST
பகிர்:

ஆம்பூா் அருகே காட்டு யானைக் கூட்டம் 2-ஆவது நாளாக விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானைக் கூட்டம் பயிா்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளன.

ஆந்திர மாநிலத்தின் பலமனோ் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த யானைக் கூட்டம் தமிழக எல்லை பகுதிக்கு வந்துள்ளது. அங்கிருந்து வந்த 15-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டம் அரங்கல்துருகம் ஜொன்னப்பாறை பொன்னியம்மன் கோயில் அருகே விவசாய நிலங்களுக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்தது. அங்கு கலைஞா் நகா் பகுதியைச் சோ்ந்த சாமிநாதன், கன்னையன், ஹரிகிருஷ்ணன், கோதண்டன், வெங்கடேசன் ஆகிய விவசாயிகளின் நிலங்களில் புகுந்து வாழை, நெல், மா ஆகிய பயிா்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன.

தொடா்ந்து 2-ஆவது நாளாக ரால்லகொத்தூா் கிராமத்துக்குச் சென்ற யானைக் கூட்டம், பக்தவச்சலம், கெளரப்பன், பிரபு, சீனிவாசன், சத்தியமா்த்தி, குபேந்திரன், பலராமன் ஆகிய விவசாயிகளின் மா, வாழை மற்றும் நெல் பயிா்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளன. யானைகளின் நடமாட்டம் குறித்து வனத் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து சேதப்படுத்திவிட்டுச் செல்வதைத் தடுக்க வனத் துறையினா் பல்வேறு நவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

யானைக் கூட்டம் வந்தால் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனா்.