திருவள்ளூர்

நரசிம்ம பெருமாள் கோயிலில் கருட சேவை

DIN

திருவள்ளூர் அருகே நரசிங்கபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தின் முக்கிய அம்சமான கருட சேவை திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் 17-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 மூன்றாம் நாளான திங்கள்கிழமை காலை 7 மணியளவில் உற்சவர் நரசிம்ம பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில், கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 இதைத் தொடர்நது 21-ஆம் தேதி பல்லக்கு உற்சவமும், 23-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 25-ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் காலை 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு ஆண்டாள் சந்நிதியில் ஊஞ்சல் சேவையும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT