திருவள்ளூர்

தேசிய இளைஞர் தின போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

DIN

விவேகானந்தர் ஜயந்தியை யொட்டி  நடைபெற்ற திறனறிதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையொட்டி பல்வேறு திறனறிதல் மற்றும்  விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதில் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல்  டி.ஜெ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். 
சிறப்பிடம் பெற்ற இம் மாணவர்களுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. டி.ஜெ.எஸ். கல்விக் குழுமத் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குனர் டி.டி.தினேஷ்,  முதல்வர் பிச்சைமணி, நிர்வாக அலுவலர் பாபு முன்னிலை வகித்தனர்.
கல்லூரி சார்பில் சான்றிதழ் மற்றும்  பரிசுகளை டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT